பூமியின் தாய்ப்பாலே!
என்ன வரம் பெற்றாயோ,
பூக்களை குளிப்பாட்டும் பாக்கியம் உனக்கு!
என்ன தவம் செய்தேனோ,
உனை வர்ணித்து எழுதும் பாக்கியம் எனக்கு!
ஒவ்வொரு புல்பூண்டுக்கும் அன்னமிட்டாய்
அத்தனையீலும் உன் ரத்தம் ஓடுகிறது.
எப்படி சொல்வேன் உன் மகிமையை!
நீ தொட்டால் மண்கூட வாசம் வீசுகிறது,
கல்லுக்குள்ளும் ஈரம் பாய்கிறது.
நான் வாழும் இந்த நாகரீக வாழ்க்கை
நீ தந்த பிச்சை என்பதை நான் மறந்ததில்லை.
என் மறுபிறவியை உனக்கு தந்தால்
ஒரு துளியாக என்னை சேர்த்துக்கொள்வாயா!
ஆவலுடன்,
அருண்
Sunday, January 30, 2011
Monday, January 17, 2011
உழைப்பு
எத்தனை நாள் வாழப்போகிறதோ தெரியவில்லை
அத்தனை நாளும் உழைக்கிறது கட்டெறும்பு!
யார் பசியை போக்க நினைத்தானோ தெரியவில்லை
வெறும் வயிற்றிலும் ஏர் உழுதுகொண்டிருக்கிறான் உழவன்!
நகர்ந்த நாட்களை மறந்திடுவோம்
மலரும் நாட்களை நகர்த்திடுவோம்
நெருப்பையும் சுமக்கும் சக்தி உன் நெஞ்சுக்குண்டு
சூரியனை சுடம் சுடர் உன் கண்களிலுண்டு!
உன் வியர்வை துளிகள் வெற்றி விருந்துக்கு
உப்பாய் மாறட்டும்...
உழைப்பவன் வீழ்வதில்லை!
வீழ்பவன் உழைப்பதில்லை!
உண்மையாய் உழைப்போம்
உயிர் உதிரும் வரை உழைப்போம்.
---அருண்
அத்தனை நாளும் உழைக்கிறது கட்டெறும்பு!
யார் பசியை போக்க நினைத்தானோ தெரியவில்லை
வெறும் வயிற்றிலும் ஏர் உழுதுகொண்டிருக்கிறான் உழவன்!
நகர்ந்த நாட்களை மறந்திடுவோம்
மலரும் நாட்களை நகர்த்திடுவோம்
நெருப்பையும் சுமக்கும் சக்தி உன் நெஞ்சுக்குண்டு
சூரியனை சுடம் சுடர் உன் கண்களிலுண்டு!
உன் வியர்வை துளிகள் வெற்றி விருந்துக்கு
உப்பாய் மாறட்டும்...
உழைப்பவன் வீழ்வதில்லை!
வீழ்பவன் உழைப்பதில்லை!
உண்மையாய் உழைப்போம்
உயிர் உதிரும் வரை உழைப்போம்.
---அருண்
Subscribe to:
Posts (Atom)